Pages

Monday, April 21, 2014

வவுனியா வைத்தியசாலையிலிருந்து புலி உறுப்பினர் தப்பி ஓட்டமாம்!!

Monday, April 21, 2014
இலங்கை::வவுனியாவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த வைக்கப்பட்டிருந்த புலி உறுப்பினர் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தப்பி ஓடியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

புலிகள் மீண்டும் புத்துயிர் பெறுவதாக குறிப்பிடப்பட்டு வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட கைது நடவடிக்கைகள் இடம்பெற்ற நிலையில் பொலிஸ் ஊடகப் பிரிவு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

குறித்த நபர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை வைத்தியசாலையில் இருந்து குறித்த  புலி உறுப்பினர் தப்பிச் சென்றதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

No comments:

Post a Comment