Pages

Saturday, April 26, 2014

7 பேர் விடுதலை தொடர்பான வழக்கை அரசியலாக்க கூடாது: காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்!

Saturday, April 26, 2014
சென்னை::7 பேர் விடுதலை தொடர்பான வழக்கை அரசியலாக்க கூடாது: காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்.
 
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கை சட்டரீதியாக பார்க்க வேண்டுமே தவிர அரசியலாக்க கூடாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்தார்.
 
சென்னை சத்யமூர்த்திபவனில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் நிரபராதி என்பதை ஏற்க முடியாது என்றும், மூன்று மாதங்களுக்குள் அரசியல் சாசன அமர்வு அளிக்கும் தீர்ப்பை ஏற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment