Sunday, 05, January, 2014
இலங்கை::(புலி)கூட்டமைப்பின் சிறிதரன் எம்.பி எற்பார்டில்: சிறிதரன் எம்.பி. வீட்டுக்கு சென்று இருவர் அச்சுறுத்தியுள்ளதாக (புலி)கூட்டமைப்பின் சிறிதரன் எம்.பி தகவல்!
தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பின் யாழ்.
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனின் வீட்டுக்கு நேற்று முன்தினம்
மாலை 4.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் கொலை
அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக (புலிகூட்டமைப்பின் புள்ளை பிடிகாரன்) எஸ்.சிறிதரன் எம்.பி. தெரிவித்தார்.
இலக்கத் தகடு இல்லாத மோட்டார் சைக்கிளில் நல்லூர் செட்டித் தெருவிலுள்ள
சிறிதரன் எம்.பி. வீட்டுக்குச் சென்ற இனந்தெரியாத இருவர் எம்.பி. எங்கே
எனக்கேட்டுள்ளனர். அவர் வீட்டிலில்லை என வீட்டார் தெரிவிக்கவும் திரும்பிச்
சென்ற அந்த நபர்கள் மீண்டும் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் திரும்பி வந்து
எம்பி எங்கே எனக் கேட்டுள்ளனர்.
அவர் இன்னும் திரும்பவில்லை என வீட்டார் தெரிவிக்கவும் அவர் எங்கே
சென்றார் என எமக்குத் தெரியும். பார்த்துக் கொள்கின்றோம் என அச்சுறுத்தும்
தொனியில் கூறியுள்ளனர். மேலும் அவர்கள் இரவு 8.30 மணிவரை அந்த
ஒழுங்கைக்குள் இருந்ததாகவும் தெரிய வருவதாக (புலிகூட்டமைப்பின் புள்ளை பிடிகாரன்) சிறிதரன் எம்.பி. தெரிவித்தார்.


No comments:
Post a Comment