Thursday, January 16, 2014

ஈரானுடனான உறவுகளைத் தொடரப் போவதாக இலங்கை அரசாங்கம் அறிவிப்பு!

Thursday, January 16, 2014  
இலங்கை::ஈரானுடனான உறவுகளைத் தொடரப் போவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஈரானுடன் வலுவான நட்புறவைப் பேணுவது மகிழ்ச்சி அளிப்பதாக இலங்கை அறிவித்துள்ளது.
 
அமைச்சர் ரிசாட் பதியூதின் ஈரானுக்கு விஜயம் செய்துள்ளார். அமைச்சர் பதியூதீன் ஈரானிய பிரதி வெளிவிவகார அமைச்சர் மொர்டசா சர்மானியை தெஹ்ரானில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

முதலீடு மற்றும் ஏனைய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
 
பல்வேறு துறைகளில் ஈரானுடன் மிக நெருங்கிய தொடர்புகளைப் பேணுவதற்கு விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதெவேளை, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக ஈரானிய பிரதி வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment