Saturday, December 14, 2013
இலங்கை::கல்முனை மாநகர சபை மற்றும் கல்முனை பொலிஸ் நிலையம் என்பன இணைந்து கல்முனை நகரில் ஏற்பாடு செய்துள்ள டெங்கு ஒழிப்பு சிரமதானம் இன்று வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் நடைபெற்று வருகின்றது.
கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர், பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.எம்.கபார், ஆணையாளர் ஜே.லியாகத் அலி ஆகியோர் இச்சிரமதானத்தை ஆரம்பித்து வைத்து- வழிநடாத்துகின்றனர்.
நேற்று முழுநாள் இடம்பெறுகின்ற இச்சிரமதானப் பணிகளில் மாநகர சபை ஊழியர்களுடன் பொலிசார், விசேட அதிரடிப் படையினர், வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களும் பங்கேற்றுள்ளனர்.








No comments:
Post a Comment