Tuesday 10 December 2013
இலங்கை::மரண தண்டனையில் மாற்றம் கொண்டு வருவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சு அறிவித்துள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளின் தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைப்பதற்கு திட்டமிட்டள்ளதாக சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர குறிப்பிட்டுள்ளார்.
ஆயுள்தண்டனை அனுபவித்துவரும் கைதிகளின் தண்டனைக் காலத்தை 20 வருடங்களாக குறைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தள்ளார். இது தொடர்பிலான யோசனைத் திட்டமொன்றை நீதி அமைச்சிடம் சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment