Pages

Saturday, October 19, 2013

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருப்பதாக கூறும் ஒழுங்கமைப்புகள் அது சம்பந்தமான தெளிவான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும்: பிரதீபா மஹாநாமஹேவா!

Saturday, October 19, 2013
இலங்கை::இலங்கையின் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருப்பதாக கூறும் ஒழுங்கமைப்புகள் அது சம்பந்தமான தெளிவான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன் ஆணையாளர் பிரதீபா மஹாநாமஹேவா இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
 
இலங்கையின் மனித உரிமை ஆர்வலர்களுக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு சில அமைப்புகள் சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
 
அவ்வாறு பாதுகாப்பற்ற சூழ்நிலை காணப்படுமாக இருந்தால், அது சம்பந்தமான ஆதாரங்களையும் இந்த அமைப்புகள் முன்வைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
 

No comments:

Post a Comment