Pages

Wednesday, October 16, 2013

வட அயர்லாந்து காவல்துறையின் இரண்டு சிரேஸ்ட அதிகாரிகள், இறுதிப்போரின் போது இலங்கைப்படையினருக்கு உதவி: இலங்கை நிராகரிப்பு!

Wednesday, October, 16, 2013
இலங்கை::பிரித்தானியாவின் வட அயர்லாந்து காவல்துறையின் இரண்டு சிரேஸ்ட அதிகாரிகள், இறுதிப்போரின் போது இலங்கைப்படையினருக்கு உதவியதாக பிரித்தானிய டெலிகிராப் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது

பிரித்தானிய காவல்துறை இலங்கைக்கு மார்கிரட் தட்சர் காலத்தில் இருந்தே இரகசியமான ஆலோசனைகளை வழங்கி வருகிறது

இதன்போது பிரித்தானிய புலனாய்வுத்துறை தலைவரும் இலங்கை காவல்துறையினருக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்

இந்தநிலையில் இறுதிப்போர் காலத்திலும் பிரித்தானிய காவல்துறை இலங்கைக்கு உதவியதாக டெலிகிராப் குறிப்பிட்டுள்ளது

2007 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் சுமார் 3500 காவல்துறையினர் ஸ்கொட்லாந்து காவல்துறை மையத்தில் பயிற்சி பெற்றுள்ளதாகவும் பிரித்தானிய டெலிகிராப் இணைத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

பிரித்தானிய இணையத்தளத்தின் இந்த செய்தி தொடர்பில், இலங்கையின் இராணுவப்பேச்சாளர் ருவன் வணிகசூரியவை தொடர்புகொண்டு கேட்டபோது செய்தியில் உண்மையில்லை என்று குறிப்பிட்டார்.

வடஅயர்லாந்து காவல்துறையினர் போரின் போது தமக்கு ஆலோசனைகளை வழங்கவில்லை என்றும் வணிகசூரிய தெரிவித்தார்.

No comments:

Post a Comment