Tuesday, October 22, 2013

பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டினை முன்னிட்டு வாகன பவனி நல்லூரில் ஆரம்பமானது!

Tuesday, October 22, 2013
இலங்கை::நடை பெறவிருக்கும் பொது நலவாய அரச தலைவர்களின் மாநாட்டை முன்னிட்டு பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட வாகன பேரணி நேற்று (21)  சர்வமத ஆசீர்வாதத்துடன் ஆரம்பமாகியது.
 
இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலென்ரின்- யாழ். மாவட்டக் கட்டளைத்; தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க- மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம்- ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம்- சர்வமத குருமார்கள்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சாவகச்சேரி- புதுக்குடியிருப்பு- முல்லைத்தீவு- கிளிநொச்சி-வவுனியா- மிஹிந்தலை-கெக்கிராவ- பலபத்வல-அக்குரன-கேகாலை-நிட்டம்புவ போன்ற பிரதேசங்களுடாகச் செல்லும் இப்பேரணி  இம்மாதம் 30ஆம் திகதி காலி முகத்திடலை அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. .

No comments:

Post a Comment