Pages

Monday, October 7, 2013

13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்தியாவிடம் கோரவுள்ளது!

Monday, October, 07 ,2013
இலங்கை::13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்தியாவிடம் கோரவுள்ளது.
 
இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துடன் நடைபெறும் சந்திப்பின் போது இந்த கோரிக்கை விடுக்கப்பட உள்ளது.
 
அர்த்தமுள்ள வகையில் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டியது அவசியமானது என தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
 
மீனவர் பிரச்சினை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment