Sunday, June 16, 2013

பங்கரவாத அமைப்புகளின் மற்றும், புலிகளின் இலட்சனை அடையாளங்களை அழிக்க ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் கொண்டு வரவேண்டும்: ரவிநாத் ஆரியசிங்க!

Sunday, June 16, 2013
ஜெனீவா::பங்கரவாத அமைப்புகளின் மற்றும் புலிகளின் இலட்சனை  அடையாளங்களை   கொடிகள் மற்றும் தொனிப்பொருட்களுக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்று, ஜெனீவாவில் உள்ள இலங்கை பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான ஏகப்படுத்தல் என்ற தொனிப்பொருளில் ஜெனீவாவில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

ஐக்கிய நாடுகள் சபை இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

பயங்கரவாத அமைப்புகள் பொது மக்களை அனுகி, வரப்பிரசாதங்களை பெற்றுக் கொள்ள இடமளிக்கக்கூடாது என்றம் அவர் தெரிவித்துள்ளார். 
அத்துடன் சர்வதேச ரீதியாக பங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு, உலகின் அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற தொனிப்பொருளில் ஜெனிவாவில் நடந்த கருத்தமர்விலேயே ரவிநாத் ஆரியசிங்கா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

உலகில் உள்ள பயங்கரவாதிகளின் இலட்சினைகள், அடையாளங்களை அழிக்க ஐ. நா. முன்வரவேண்டும் என்றும் இந்த இலட்சனைகளை வைத்து பயங்கரவதிகள் பொதுமக்களிடம் தமது கருத்துக்களை விதைப்பதோடு, நிதியையும் திரட்ட உதவுவதாக ஆரியசிங்கா தெரிவித்துள்ளார்..
 
 


 


 

No comments:

Post a Comment