Sunday, March 10, 2013
இலங்கை::மகா சங்கத்தினரின் ஆசியை உயர்வாக கருதியதால் இரண்டரை வருடங்களுக்குள் யுத்தத்தை நிறைவு செய்ய முடிந்ததாக பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
காலியில் நேற்று முற்பகல் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்
நாட்டில் தற்போது தேரர்கள் சற்று கண்டிப்பாக செயற்படுவது மக்களிடையே அச்சத்தை தோற்றுவித்துள்ளது. எனினும் தேரர்களின் குறித்த செயற்பாட்டால் அச்சப்படவேண்டாம் எனவும் சற்று கடினமாக நடந்துகொள்ளும் போதே மக்கள் புரிந்துகொள்வதாகவும் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
காலியில் பொது பல சேனாவுக்கு அன்பளிப்பு செய்யப்பட பௌத்த கலாசார மத்திய நிலையம் மற்றும் பயிற்சி நிலையம் ஆகியவற்றை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும் பலர் அதனை பேசி தீர்க்குமாறே கூறினார். எனினும் நாம் சற்று கடினமாக நடந்து அதற்கு தீர்வு கண்டோம். அதுவே சாத்தியமானது.
அதுபோல் பௌத்த தேரர்கள் மென்மையை சற்று கைவிட்டு கொஞ்சம் கடினமாக சில விடயங்களை சொல்கிறார்கள். அதனால் நாட்டு மக்கள் அச்சமடைய வேண்டியதில்லை. அவ்வாறு பயப்படுபவர்கள் தற்போதிலிருந்து அந்த அச்சத்தை நீக்கிக்கொள்ளுங்கள் என்றார்;.





No comments:
Post a Comment