Pages

Saturday, February 16, 2013

இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை - ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை!

Saturday, February 16, 2013

இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளதாக இன்டர்சிட்டி எக்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மார்ச் மாதம் நடைபெறவிருக்கின்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை கூட்டத்தின் பின்னர் திகதி நிர்மாணிக்கப்படும் என்றும் நவநீதம்பிள்;ளை தெரிவித்துள்ளார்.

கற்றுகொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துதல் தொடர்பில் மதிப்பிடுவதற்கு இலங்கைக்கு 10 விசேட அறிக்கையாளர்களை அனுப்பும் நோக்கத்தில் அவர் உள்ளார்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவிருந்தார் எனத்தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment