Tuesday, February 19, 2013
லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் தீபம் தொலைக்காட்சியை புலிகள் விலைக்கு வாங்கியுள்ளனர். நோர்வேயில் உள்ள புலிகளின் மக்களவையை சேர்ந்தவர்களே இதனை வாங்கியுள்ளனர். தீபம் தொலைக்காட்சியின் உரிமையாளர் துரை பத்மநாதன் நிதிமோசடி தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு அவர் மீது காவல்துறையினர் சட்டநடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து தீபம் தொலைக்காட்சி நெருக்கடிக்குள் சிக்கியிருந்தது. இந்நிலையில் அத்தொலைக்காட்சியை வாங்குவதற்கு பலரும் முயற்சி செய்த போதிலும் அதிக பணத்தை நோர்வேயில் உள்ள (LTTE, TCC, NCET) புலிகள் கொடுத்ததால் தீபம் தொலைக்காட்சி கைமாறி உள்ளது.
தீபம் தொலைக்காட்சி நோர்வேயில் உள்ள புலிகளால் வாங்கப்பட்டுள்ளதால் ஒரு சிலர் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதில் முக்கியமான ஒருவர் தீபம் தொலைக்காட்சியின் முக்கிய நபராக கருதப்படும் அனாஸ். அனாஸ் ஒரு நல்ல அறிவிப்பாளர், ஊடகவியலாளர், ஆனால் தீபம் தொலைக்காட்சியில் தொடர்ந்து இருக்க வேண்டுமாக இருந்தால் சில விடயங்களை அவர் செய்ய வேண்டி ஏற்படலாம்.
ஓன்று பாசிச புலிகள் என்ற வார்த்தையை அவர் இனிமேல் தீபம் தொலைக்காட்சியில் பாவிக்க முடியாது. பாவித்தால் பாவம் அவர் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்.
இரண்டாவது விடயம் வருடாவருடம் யாழ்ப்பாண முஸ்லீம்களை 24 மணிநேரத்தில் உடுத்த உடுப்போடு பாசிச புலிகள் வெளியேற்றிய ஆண்டு தினம் இன்று என செய்ய முடியாது. முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டதை யாரும் நியாயப்படுத்த முடியாது. அது தவறுதான்.
மூன்றாவது விடயம் இனிமேல் இனிமேல் புலிகள் அலது புலிகளின் ஆதரவலார்கள் மாத்திரம் பேசலாம்
அடுத்தது தீபம் தொலைக்காட்சி அடிக்கடி களம் அமைத்துக்கொடுக்கும் இரு பெண்கள், பாசிச புலிகள் பாசிச புலிகள் என்ற இருவர். (இராஜேஸ்வரி அக்கா, நிர்மலா அக்கா) அவர்களுக்கும் இனி லண்டனில் புலிகளின் தொலைக்காட்சிகளில் களம் இல்லை......
தீபம் தொலைக்காட்சியை வாங்குவதற்கு பல்வேறு தமிழ் நிறுவனங்கள் முன்வந்த போதும் நட்டத்தில் இயங்கும் தொலைக்காட்சி நிறுவனத்தை பொறுப்பேற்பதில் தயக்கம் காணப்பட்டது. இறுதியாக நோர்வே நாட்டில் வதியும் LTTE குழுவினர் தீபம் தொலைக்காட்சியுடன் உடன்பாட்டை எட்டினர்.
நோர்வே யைச் சேர்ந்த புதிய LTTE, TCC, NCET உரிமையாளர்கள் ‘உச்சிதனை முகர்ந்தால்’ என்ற படத்தைத் தயாரித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது....
2000ம் ஆண்டு யூலை மாதம் தீபம் தொலைக்காட்சி துரை பத்மநாதன் என்ற கோடீஸ்வரரான தொழில் முகவரால் லண்டனைத் தளமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. தீபத்தின் பெரும்பாலான பங்குதாரரான துரை பத்மநாதனும் மற்றைய பங்காளரான செல்வகுமாரும் தீபத்தை பத்து ஆண்டுகளுக்கு மேலாக இயக்கி வருகின்றனர். சென்ற ஆண்டு துரை பத்மநாதன் நிதி மோசடியில் சிக்கியதைத் தொடர்ந்து தீபத்தின் எதிர்காலம் கேள்விக் குறியானது. (இது பற்றிய விரிவான செய்தி கீழே.) துரை பத்மநாதன் தற்போது ஒரு மில்லியன் பவுண் பெயிலில் விடுவிக்கப்பட்டு உள்ளார். இவருடைய வழக்கு விரைவில் நீதிமன்றத்துக்கு வரவுள்ளது. நிதி மோசடி வழக்கைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு முன்னதாக துரை பத்மநாதன் தீபம் தொலைக்காட்சியில் இருந்து விலகியும் இருந்தார்.
தீபம் தொலைக்காட்சி உரிமையாளர் மீது நிதிமோசடி வழக்கு!
தீபம் தொலைக்காட்சியின் உரிமையாளர் துரை பத்மநாதன் நிதிமோசடி தொடர்பிர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு உள்ளார். ஐக்கிய இராஜ்யத்தின் எல்லைப் பாதுகாப்புப் பிரிவினர்> சுங்க வரித்திணைக்கள அதிகாரிகள் பல்வேறு பொலிஸ் பிரிவினர் இணைந்து மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் போது துரை பத்மநாதன் உட்பட மேலும் இரு ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டு உள்ளனர். ரெடிங்ரன், வேய்பிறிஜ், எப்சம், ஹரோ ஆகிய லண்டனின் புறநகர்ப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடிர் தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் துரை பத்மநாதன், மயூரன் குகதாசன் இருவர் மீதும் குற்றப் பொருட்களை மறைத்த, மறுவடிவமைத்த, பரிமற்றம் செய்த, கைமாற்றிய, இல்லாமற் செய்த குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் குற்றச் சட்டம் 2002 இன் கீழ் குற்றம் இழைத்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்விருவரும் டிசம்பர் 1இல் ரெட்ஹில் மஜிஸ்ரேட் கோர்ட்டில் நிறுத்தப்பட்டு மீண்டும் டிசம்பர் 12இல் நீதிமன்ற விசாரணை வரை பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
மற்றைய ஆணும் பெண்ணும் மார்ச் 1 வரை பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
நவம்பர் 30இல் இடம்பெற்ற இத்தேடுதல் வேட்டையின்போது வேய்பிறிஜ் ரெவென்ஸ்குரொப்ற் றோட்டில் 63 வயதுடைய துரைசாமி பத்மநாதன் கைது செய்யப்பட்டார். மைன்ஹெட் றோட் ஹரோவில் 38 வயதுடைய மயூரன் குகதாசன் கைது செய்யப்பட்டார். 45 வயதுடைய மற்றுமொரு ஆண் ரெடிங்ரனிலும் 33 வயதுடைய பெண் ஹம்ரன் ஹில் என்ற இடத்தில் உள்ள வர்த்தக முகவரியில் வைத்தும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
‘தேடுதல் நடவடிக்கையின் போது பல்வேறு ஆவணங்களும் மோபைல் போன்கள், கணணிகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளது” என்றும் “இவையும் பரிசோதணைக்கும் ஆய்வுக்கும் உட்பட்டு உள்ளது” என்றும் கிரிமினல் மற்றும் நிதி விசாரணைகளுக்கு பொறுப்பான எல்லை பாதுகாப்புப் பிரிவின் துணை இயக்குநர் பீற்றர் அவ்ரி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் இதுவொரு குழப்பமான சிக்கலான நிதி விசாரணை என்றும் பல மில்லியன் பவுண்கள் மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
2011 செப்ரம்பரில் சென் பன்கிரியஸ் சர்வதேச ரெயில் நிலையத்தில் ஒரு பயணியிடம் இருந்து 300,000 பணத்தை எல்லை காவற்துறையினர் கைப்பற்றி இருந்தனர். அதனைத் தொடர்ந்து தற்போதைய கைதுக்கான விசாரணைகள் முடுக்கி விடப்பட்டு இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் கோல்ட் குவஸ்ற் நிறுவனர் விஜய் ஈஸ்வரன் கைது செய்யப்பட்டது பற்றியும் விஜய் ஈஸ்வரனுக்கும் தீபம் தொலைக்காட்சிக்கும் இருந்த நெருக்கத்தை தேசம்நெற் இணையம் வெளிக்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. இச்செய்திக்காக துரை பத்மநாதன் தேசம்நெற் இணையத்துக்கு எதிராக வழக்குத் தொடரப் போவதாக எச்சரிக்கைக் கடிதமும் அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
1970க்களில் பரித்தானியா வந்த துரை பத்மநாதன் பிரித்தானியாவில் உள்ள முக்கிய தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான QiCommia யை நிறுவியவர். £ 93 மில்லியன் ஆண்டு வர்த்தகத்தைக் கொண்ட இந்நிறுவனத்தின் தலைமை இயக்குநர் பத்மநாதன். பத்மநாதனின் இரு பிள்ளைகள் அவருடைய நிறுவனத்திலேயே முக்கிய பதவிகளை வகிக்கின்றனர். ஓரு பிள்ளை Goldman Sachs நிறுவனத்தின் பங்காளியாக உள்ளார்.

No comments:
Post a Comment