Pages

Thursday, December 6, 2012

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 10 பேரை விசாரணைக்கு வருமாறு யாழ்ப்பாணம் பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்!

Thursday, December 06, 2012
இலங்கை::யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 10 பேரை விசாரணைக்கு வருமாறு யாழ்ப்பாணம் பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர். இது தொடர்பான அறிவிப்பு யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரியரட்ணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், பெயர் குறிப்பிடப்பட்டுள்ள 10 மாணவர்களையும் பெற்றோருடன் விசாரணைக்கு செல்லுமாறும் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் கூறியுள்ளார்.

இந்த 10 பேர் அடங்கிய மாணவர் குழுவில் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஐவரும் முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment