Thursday, April 12, 2012இலங்கை::கடத்தல் சம்பவங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என கொழும்பு பேராயர் அதி வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் இத்தாபானே தம்மலாலங்கார தேரர் ஆகிய மதத் தலைவர்கள் கூட்டாக இணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறுவதனை ஏற்றுக்கொள்ள முடியாத என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடத்தல் சம்பவங்கள் நாட்டின் மத விழுமியங்களுக்கு பொருத்தமற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சட்டத்திற்கு எதிராக எவரேனும் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்டத்திற்பு புறம்பான வகையில் நடவடிக்கை எடுத்தல் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என மதத் தலைவர்களினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment