சென்னை::சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா பேசியபோது, 'மக்கள் அதிமுக நம்பி ஓட்டு அளித்ததாகவும், ஆனால் சிலர் இந்த வெற்றியை மக்களுக்கு ஏற்பட்ட தோல்வியாக கூறு வருகிறார்கள்' எனக் கூறினார். முதல்வர் ஜெயலலிதாவின் இந்த கருத்துக்கு திமுக உறுப்பினர்கள் அவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் முதல்வர் ஜெயலலிதா அவ்வாறு பேசக் கூடாது என கோஷமிட்டனர். இதற்கு பதிலளித்த ஜெயலலிதா 'நான் பொதுவாக தான் சொன்னேன்' என்று கூறினார். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ,முதல்வர் ஜெயலலிதாவின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக வெளிநடப்பு செய்தனர்.
No comments:
Post a Comment