Pages

Wednesday, February 29, 2012

அரசாங்க பிரதிநிதிகள் முட்டாள் தனமான வாக்குமூலங்களை ஜெனீவாவில் வழங்கக் கூடாது- தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது!

Wednesday,February,29,2012
இலங்கை::நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழு அளவில் நடைமுறைப்படுத்துகின்றமையானது சர்வதேச விசாரணைகளை விட ஆபத்தான விளைவுகளையே ஏற்படுத்தும். எனவே அரசாங்க பிரதிநிதிகள் முட்டாள் தனமான வாக்குமூலங்களை ஜெனீவாவில் வழங்கக் கூடாது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச குற்றவியல் விசாரணைகளுக்காக இலங்கையை பலியாக்கும் நோக்கிலேயே அமெரிக்காவின் தலைமையில் மேற்குலக நாடுகள் செயற்படுகின்றன. களச்சூழலை அறிந்து கடும் போக்குடன் அந்நாடுகளுக்கு எதிராக செயற்பட வேண்டும். அப்போது தான் சவால்களிலிருந்து மீள முடியும் என்று அவ் இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர கூறுகையில், ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை கண்டித்து அதற்கு எதிராக செயற்பட வேண்டுமே தவிர வீண் வாக்குமூலங்களைக் கொடுத்து நாட்டை ஆபத்தில் தள்ளிவிடக்கூடாது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் நல்ல விடயங்களை விட நாட்டிற்கு ஒவ்வாத பெரும் ஆபத்துக்களை ஏற்படுத்தக் கூடிய விடயங்களே கூடுதலாக காணப்படு கின்றது.

நல்லிணக்க ஆணைக்குழு பல சந்தர்ப்பங்களில் எல்லை மீறியும் செயற்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பழைய விடயங்கள் தொடர்பில் தற்போது பேசுவது பயனற்றதாகும். எனவே அரசாங்கம் முழு பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். அமெரிக்காவின் தலைமையிலான மேற்குலக நாடுகளினால் இலங்கைக்கு அச்சுறுத்தல்கள் உள்ளது. ஜெனீவா மனித உரிமை கூட்டத் தொடல் அது பாரியளவு வெளிப்படா விட்டாலும் பிற்காலத்தில் ஆபத்துகள் ஏற்படுத்தக்கூடும்.

எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உள்நாட்டில் அமுல்படுத்தக் கூடாது. ஏனைய வலய நாடுகளுடன் இணைந்து புதிய கூட்டணியொன்றை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குணதாச அமரசேகர கூறியுள்ளார்.

No comments:

Post a Comment