Pages

Wednesday, February 29, 2012

இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றும் திட்டம் இன்னமும் கைவிடப்படவில்லை-ரொபர்ட் ஓ பிளக்!

Wednesday,February,29,2012
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றும் திட்டம் இன்னமும் கைவிடப்படவில்லை என தென் மற்றும் மத்திய ஆசியபிராந்திய வலயத்திற்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பான தீர்மானம்நிறைவேற்றும் திட்டம் குறித்து தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் ஆலோசனைக் குழுவில், ஐக்கியநாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வாநியமிக்கப்பட்டமை குறித்தும் கருத்து வெளியிட்டுள்ளார்.

இலங்கை யுத்தம் தொடர்பில் சுயாதீனமானதும் முழுமையானதுமான விசாரணைகள்நடத்தப்படாத நிலையில் சவேந்திரவை, ஆசிய பிராந்திய வலய பிரதிநிதியாக நியமித்தமைபொருத்தமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment