Monday, October 03, 2011நகரங்கள் மற்றும் காலநிலை மாற்றம் என்ற தொனிப்பொருளில் உலக குடியிருப்பாளர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
இம்முறை உலக குடியிருப்பாளர் தின தேசிய நிகழ்வு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக பொறியியலாயர் சேவைகள் மற்றும் பொது வசதிகள் அமைச்சு தெரிவிக்கிறது.
1985 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் குடியிருப்பாளர் ஆணைக்குழுவின் மாநாட்டில் உலக குடியிருப்பாளர் தினம் தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து 1987 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது. உலக குடியிருப்பாளர் தினத்தை முன்னிட்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் இன்று வரை விசேட குடியிருப்பாளர் வாரம் அரசாங்கத்தால் பெயரிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment