Pages

Thursday, September 29, 2011

இன்று காலை அமைதியான தபால்மூல வாக்களிப்பு!

Thursday,September, 29, 2011
கொழும்பு:இன்று காலை நடைபெற்ற தபால்மூல வாக்களிப்பு மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றதாகவும் எதுவித வன்முறைகளும் இடம்பெறவில்லை என்றும் பெப்ரல் அமைப்பின் இயக்குநர் ரோஹன ஹெட்டியாரச்சி எமது இணையத்துக்குத் தெரிவித்தார்.

17 மாநகர சபைககள்- ஒரு நகரசபை மற்றும் 5 பிரதேச சபைகளுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று காலை 8.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணிவரை நடைபெற்றது.

பெப்ரல் அமைப்பினால் 63 வாக்களிப்பு நிலையங்கள் கண்காணிக்கப்பட்டதாகவும் இயக்குநர் தெரிவித்தார். வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது முதல் இன்று வரை 65 வன்முறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment