Pages

Thursday, September 29, 2011

4வது நாளாக காஷ்மீரில் துப்பாக்கி சண்டை:உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது!

Thursday,September, 29, 2011
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் கிராலிபோரா பகுதியில் கடந்த திங்கள்கிழமை தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற¢பட்ட துப்பாக்கி சண்டை, இன்று 4வது நாளாக நீடித்து வருகிறது. துப்பாக்கி சண்டையில் காயமடைந்த ஜவான் ஒருவர் நேற்றிரவு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதை தொடர்ந்து இந்த துப்பாக்கி சண்டையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

வடக்கு காஷ்மீர் குப்வாரா மாவட்டம் கிராலிபோரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கடந்த திங்கள்கிழமை பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை ராணுவத்தினர் மற்றும் போலீசார் சுற்றி வளைத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை மூண்டது.

கடந்த 3 நாட்களில் 5 தீவிரவாதிகள், இரண்டு போலீசார், ஒரு ராணுவ உயர் அதிகாரி பலியானார்கள். ஜவான் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இவர், நேற்றிரவு உயிரிழந்தார். 4 வது நாளாக சண்டை இன்று நீடித்தது. லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த 7 தீவிரவாதிகள் அங்கு பதுங்கியிருக்கலாம் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment