யுத்தத்தின் போது புலிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் ரகசிய தகவல்களை அனுப்புவதற்கு பயன்படுத்தப்படும் பீ.ஆர்.டி 77 என்ற அதிசக்தி வாய்ந்த தொழிற்நுட்பத்துடன் கூடிய கருவி கண்டுபிடிப்பு!
Sunday, August 21, 2011
யுத்தத்தின் போது புலிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் ரகசிய தகவல்களை அனுப்புவதற்கு பயன்படுத்தப்படும் பீ.ஆர்.டி 77 என்ற அதிசக்தி வாய்ந்த தொழிற்நுட்பத்துடன் கூடிய கருவி கண்டுபிடிப்பு!
யுத்தத்தின் போது ரகசிய தகவல்களை அனுப்புவதற்கு பயன்படுத்தப்படும் பீ.ஆர்.டி 77 என்ற அதிசக்தி வாய்ந்த தொழிற்நுட்பத்துடன் கூடிய கருவி ஒன்றை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்டு, புலிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் இந்த கருவி முள்ளிவாய்க்கல் பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இந்த கருவியை சாதாரண மக்கள் எவரும் கொள்வனவு செய்ய முடியாது என திவயின தெரிவித்துள்ளது. இதனால் இந்த அதிநவீன தொடர்பாடல் கருவி எவ்வாறு புலிகளுக்கு கிடைத்தது என்பது குறித்து அரசாங்கம் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment