Pages

Sunday, March 5, 2017

அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், போப் பிரான்சிஸ் உள்ளிட்ட 318 பேர் பரிந்துரை !

அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், போப் பிரான்சிஸ் உள்ளிட்ட 318 பேர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 1901ல் இருந்து அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு 318 பேர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இதில் 215 தனிநபர், 103 சமூக அமைப்புகள் அடங்கும். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், போப் பிரான்சிஸ்
, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
அமைதிக்கான நோபல் பரிசுக்கு, இரண்டாவது முறையாக 300க்கு மேற்பட்டோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு முன், கடந்த ஆண்டு அதிகபட்சமாக 376 பேர் பரிந்துரைக்கப்பட்டனர்.
நோபல் கமிட்டி, வரும் அக்., 6ல் விருதுக்கு தேர்வான நபரின் பெயரை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment