Pages

Sunday, February 26, 2017

நெல்லியடி புலவரோடை பகுதியில், சக்தி வாய்ந்த 78 ரி.என்.ரி ரக குண்டுகள் மீட்பு!

நெல்லியடி - புலவரோடை பகுதியில், சக்தி வாய்ந்த 78 ரி.என்.ரி ரக குண்டுகள் இன்று மீட்கப்பட்டதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

 புலவரோடை பகுதியில், தென்னைகளுக்கு பசளை இடுவதற்காக நிலத்தை வெட்டிய போது, வெடிபொருட்கள் தென்பட்டதையடுத்து, பொலிஸாருக்கு அறிவிக்கப்ப
ட்டது. இதனையடுத்து, விசேட அதிரடிப்படையின் உதவியுடன், நெல்லியடி பொலிஸார், குறித்த வெடிபொருட்களை இன்று மீட்டனர்.

இப்பகுதியில் கடந்த காலத்தில் புலிகளின் முகாம் ஒன்று அமைந்திருந்தது. இவ்வெடிபொருட்கள் உள்ளூரில் தயாரிக்கப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment