Pages

Wednesday, September 23, 2015

ஜெனீவா அறிக்கை விசாரணை பொறிமுறைக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

Wednesday, September 23, 2015
ஜெனீவா மனித உரிமைகள் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விசாரணை பொறிமுறைக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேசிய சங்கங்களின் ஒன்றியத்தின் இணைப்பாளர் குணதாச அமரசேகரவின் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜெனீவாவின் மனித உரிமைகள் அறிக்கை, இலங்கை தொடர்பில் தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட தாருஸ்மன் தலைமையிலான அறிக்கையின் அடிப்படையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.

தாருஷ்மனின் அறிக்கை இலங்கையின் இறைமைக்கு எதிராக தயாரிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரையும் இலங்கையின் இறைமையை பாதிக்கும் என்று அவர் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

No comments:

Post a Comment