Pages

Saturday, September 26, 2015

தீவிர சிகிச்சைபிரிவில் சோ!

Saturday, September 26, 2015
சென்னை: பத்திரிகையாளர் சோ ராமசாமியின், உடல்நிலை மோசமானதை அடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
 
'துக்ளக்' பத்திரிகை ஆசிரியர் சோ ராமசாமி, 79; மூச்சு திணறல், நுரையீரல் பாதிப்பு காரணமாக, ஒரு மாதத்திற்கும் மேலாக, சென்னை அப்போலோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
நேற்று முன்தினம் இரவு, அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, சாதாரண வார்டில் இருந்த அவர், தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். 'அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்; எனினும், தீவிர கண்காணிப்பும், சிகிச்சை யும் தொடர்கிறது' என, டாக்டர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment