Pages

Monday, September 28, 2015

இடம்பெயர்ந்த மக்களுக்காக 65 ஆயிரம் வீடுகள்!

Monday, September 28, 2015
இலங்கை அரசாங்கம் இடம்பெயர்ந்த மக்களுக்காக 65 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இந்த மாகாணங்களில் 1லட்சத்து 37 ஆயிரத்து 529 வீடுகள் நிர்மாணிக்கப்பட வேண்டியுள்ளன.

அவற்றுள் 46 ஆயிரம் வீடுகள் இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படுகின்றன.

இதேவேளை, இந்திய அரசாங்கத்தினால் அமைக்கப்படும் வீடுகளின் நிர்மாணங்கள் அடுத்த வருட முற்பகுதியில் நிறைவு செய்யப்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விகாஸ் ஸ்வாரப் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நியுயோர்க்கில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். 

 

No comments:

Post a Comment