Pages

Sunday, August 9, 2015

கடந்த 10 வருடங்களில் மகிந்த சிந்தனையின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன: மகிந்த ராஜபக்ஷ!

Sunday, August 09, 2015
கடந்த 10 வருடங்களாக இடம்பெற்ற அபிவிருத்திகள் அனைத்தும் வெளிப்படையானவையாக அமைந்திருந்ததாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

கடந்த 10 வருடங்களில் மகிந்த சிந்தனையின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த வேலைத்திட்டங்களில் எந்த ஒளிவுமறையும் இடம்பெறவில்லை.

அதேநேரம் கெசினோ சூதாட்ட வர்த்தகத்தை நாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கவும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்..
 
அதிகரித்து செல்லும் வாழ்கை செலவிற்கான தீர்வு திட்டங்கள் எவையும் அரசாங்கத்திடம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொட பிரதேசத்தில் நேற்று இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment