Pages

Wednesday, May 20, 2015

யுத்தம் நிறைவடைந்து 06 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் வடக்கில் மீண்டும் புலிக்கொடிகள் : முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச!

Wednesday, May 20, 2015
யுத்தம் நிறைவடைந்து 06 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் வடக்கில் மீண்டும் புலிக்கொடிகள் : முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச!
 
யுத்தம் நிறைவடைந்து 06 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் வடக்கில் மீண்டும் புலிக்கொடிகள் காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 
கம்புருபிட்டியவில் நேற்று இடம்பெற்ற மத நிகழ்வொனறில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 
கடந்த ஆறு வடங்களுக்கு முன்னர் தீவிரவாதிகளை துப்பரவு செய்ய முடிந்ததாக அவர் கூறியுள்ளார்.
 
அன்று இராணுவத்தினர் தன் உயிர், உடல் உறுப்புக்களை தியாகம் செய்தமைக்கு காரணம் நாட்டை காப்பாற்றுவதற்காவே, எனினும் இன்று சிலர் அதனை மறந்து விட்டதாக மஹிந்த தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment