Pages

Tuesday, March 24, 2015

எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடுவதானால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் அமைக்கப்படும் கூட்டணி ஒன்றிலேயே போட்டி: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச!

Tuesday, March 24, 2015
எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடுவதானால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் அமைக்கப்படும் கூட்டணி ஒன்றிலேயே போட்டியிடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாரஹன்பிட்டியவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
 
பல அரசியல் கட்சிகள் தமக்கு அழைப்பை விடுத்து வருவதாகவும், ஆனால், ஏனைய அரசியல் கட்சியின் கீழ் தாம் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வாழ்த்து தெரிவித்துள்ளார். மாத்தறை, தெலிஜ்ஜவில சமரசிங்ஹாராம அறநெறிப் பாடசாலையின் நேற்று மாலை, மாணவத் தலைவர்களுக்கு சின்னம் அணிவிக்கும் நிழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'நான் தற்போது ஓய்வில் இருக்கிறேன். அரசியல் தீர்மானங்களை நான் தற்போது எடுக்கப் போவதில்லை. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இந்த தேசிய அரசாங்கம் பற்றி பேசும் போது சிலர் சிரித்தனர். கேலி செய்தனர். ஆனால், இன்று உருவாகியுள்ள தேசிய அரசாங்கத்தை நான் அவ்வாறு இழிவுபடுத்தப் போவதில்லை. வாழ்த்துக்களையே தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார்.
 
தேசிய அரசாங்கத்தின் நாடாளுமன்ற விவகார அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தனவும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment