Pages

Monday, January 12, 2015

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ள முயற்சித்தால் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது!

Monday, January 12, 2015      
இலங்கை::ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ள முயற்சித்தால் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது என கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் வேலை திட்டத்திற்கு ஆதரவளிக்க விரும்புகின்றோம்.
மக்களுக்கு நலன்களை ஏற்படுத்தக் கூடிய அனைத்து திட்டங்களுக்கும் ஆதரவளிக்கப்படும்.
 
ஒவ்வொரு திட்டமாக சீர்தூக்கிப் பார்த்து அதன் நன்மைகளின் அடிப்படையில் ஆதரவளிக்கப்படும்.
 
எனினும், சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தை பலவந்தமான அடிப்படையில் கைப்பற்றிக் கொள்ள முயற்சித்தால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
 
அவ்வாறான ஓர் பின்னணியில் புதிய ஜனாதிபதி மைத்திரிபாலவின் நூறு நாள் திட்டத்திற்கு ஆதரவும் அளிக்கப்பட மாட்டாது.
 
எதிர்வரும் நாட்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்றில் சுயாதீனமான முறையில் இயங்கும் என கட்சியின்  சிரேஷ்ட பேச்சாளர் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment