Pages

Wednesday, January 7, 2015

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு இலங்கை அதிகாரிகளிடம் சர்வதேச மன்னிப்புசபை கோரிக்கை விடுத்துள்ளது!

Wednesday, January 07, 2015
இலங்கை::இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வன்முறைகள் இடம்பெறுகின்றமை தொடர்பில் சர்வதேச மன்னிப்புசபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது
 
இந்த நிலைமையை தவிர்த்து பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அந்த அமைப்பு இலங்கையின் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
 
இலங்கையில் தொடரும் வன்முறையில் நியாயமான வாக்களிப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.எனவே அதிகாரிகள் பொதுமக்களின் அரசியல் பங்கேற்புக்கு வழிகளை ஏற்படுத்தவேண்டும்.
 
இதன்மூலமே தேர்தல் தினத்தன்று வாக்காளர்கள் பயமின்றி வாக்களிப்பில் பங்கேற்கமுடியும் என்று சர்வதேச மன்னிப்புசபையின் ஆசிய பசுபிக் வலய உதவிப்பணிப்பாளர் டேவிட் க்ரிபித்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment