Pages

Tuesday, January 13, 2015

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிறைவேற்றுகுழு கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையில் நேற்று முன் கூடியது!

Tuesday, January 13, 2015      
இலங்கை::ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிறைவேற்றுகுழு கூட்டம், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையில் நேற்று  காலை கூடியது.

இதன்போது நேற்று இடம்பெற்ற சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்;டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா இதனை தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் டளஸ் அழகபெரும, சுசில் பிரேமஜயந்த, மகிந்தானந்த அலுத்கம, குமார் வெல்கம, டிலான் பெரேரா, மகிந்த அமரவீர, லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன உள்ளிட்டு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சுதந்திர கட்சியின் நிறைவேற்று குழு உறுப்பினர்களும் பங்கு கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது நேற்றையமுன் தினம் சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ சுதந்திர கட்சியின் தலைவர் என்று மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை மத்திய செயற்குழுவும் இன்று ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.

இதன்படி, சுதந்திர கட்சியின் தலைவராக மகிந்த ராஜகப்ஸவே என மீண்டும் அறிவிக்கப்படுவதாக அனுர பிரியதர்ஷன யாப்பா இதன்போது அறிவித்தார்.

No comments:

Post a Comment