Pages

Sunday, October 12, 2014

புலிகளால் உருவாக்கப்பட்ட TNA பதியப்பட அல்ல கலைக்கப்பட வேண்டும்: வி.ஆனந்தசங்கரி!

Sunday, October 12, 2014
புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடன டியாகக் கலைத்துவிட்டு அனை வரும் தமிழர் விடுதலைக் கூட்டணியில் தம்மை இணை த்து முன்னர் போன்று செயற்பட வேண்டும் என அக்கட்சியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
 
நான் எப்போதுமே உண்மையைக் கூறுவதால் என்னை எல்லோருமே ஓரங்கட்டிவிட நினைக்கிறார்கள். ஆனால் நான் உண்மையைக் கூற ஒருபோதும் தயக்கம் காட்டமாட்டேன். என்னைப் பொறுத்தவரை தமிழ்க் கூட்டமைப்பு பதியப்பட அல்ல கலைக்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.
 
தமிழரசுக் கட்சிக்கும் நல்ல பெயர் கிடையாது என்பதால் தமிழர் விடுதலைக் கூட்டணியில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதே சரியான முடிவு எனவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment