Pages

Wednesday, October 1, 2014

ஜெயலலிதா ஜாமீனில் வெளிவர சட்ட உதவிகள் அளிக்கப்படும்: சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கம்!

Wednesday, 01, October, 2014
சென்னை::சிறையில் இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஜாமீனில் வெளிவருவதற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பால்கனகராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:
சிறப்பு நீதிமன்ற தீர்ப்பின் கீழ் சிறையில் இருக்கும் ஜெயலலிதா ஜாமீனில் வெளிவருவதற்கு அனைத்து சட்ட உதவிகளும் வழங்கப்படும். மேலும் ரூ. 100 கோடி அபராதம் விதித்ததன் மூலம் ஜாமீனில் வெளிவர முடியாத அளவில் நிபந்தனை விதித்து உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது. காவிரி பிரச்சினையை மனதில் கொண்டு ஜெயலலிதாவை பழிவாங்கும் எண்ணத்தில் கர்நாடக சிறைத் துறை அதிகாரிகள் நடத்துவது கண்டனத்துக்குரியது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment