Tuesday, October 7, 2014

வடக்கில் யுத்தம் காரணமாக பாதிக்கப்ட்ட மக்களுக்கு நட்ட ஈடு வழங்கும் நோக்கில் 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு: அரசாங்கம்!

Tuesday, October 07, 2014
இலங்கை::வடக்கில் யுத்தம் காரணமாக பாதிக்கப்ட்ட மக்களுக்கு நட்ட ஈடு வழங்கும் நோக்கில் 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

யுத்தம் காரணமாக கை, கால்களை இழந்தவர்கள் மற்றும் வீடுகள், சொத்துக்களை இழந்தவர்களுக்கு இவ்வாறு நட்ட ஈடு வழங்கப்பட உள்ளது. ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்தில் 110 மில்லியன் ரூபா ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

130 மில்லியன் ரூபா 1500 குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் எதிர்வரும் 12ம் திகதி இந்த நட்ட ஈடு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி இரணை மடுவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் நட்ட ஈடு வழங்கப்பட உள்ளது.

இதேவேளை, யுத்தம் காரணமாக சேதமடைந்த 100 வழிபாட்டுத் தளங்களை பழுது பார்க்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

No comments:

Post a Comment