Pages

Sunday, September 28, 2014

ஐ.நா. அவையில் உரையாற்றிய மோடி இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்தார்!

Sunday, September 28, 2014
நியூயார்க்::நேற்று முன் தினம் அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. சபை கூட்டத்தில் உணர்ச்சிகரமான உரையாற்றினார்.

அங்கு இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, நேபாள பிரதமர் கொய்ராலா ஆகியோரையும் மோடி சந்தித்து 
  பேசுவார்.என்று வெளியுறவுத்துறை செய்திதொடர்பாளரான சையது அக்பரூதின் ஏற்கனவே கூறியிருந்தார். அதன்படி ஷேக் ஹசீனா, மகிந்த ராஜபக்சே, சுஷில் கொய்ராலா ஆகியோரை இன்று சந்தித்து பேசினார்.

எனினும் இச்சந்திப்பில் என்ன பேசினார்கள் என்பது இது வரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாளை மறுநாள் மறுநாள் வாஷிங்டன் செல்லும் மோடி, 29 மற்றும் 30-ந் தேதிகளில் அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்து பேசுகிறார். அமெரிக்காவின் பல்வேறு மாகாண கவர்னர்களையும், கூகுள் மற்றும் பெப்சிகோ நிறுவனத்தின் தலைவர்களையும் மோடி சந்தித்து பேசுகிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment