Pages

Monday, June 16, 2014

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை சாரணைகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை: திஸ்ஸ விதாரண!

Monday, June 16, 2014இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் இலங்கை தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைகளுக்குழுவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
 
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்துவதற்கு அனுமதியளிக்கப்பட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் ஆதரளிக்கக் கூடாது என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.யுத்தம் தனித்து வெற்றிகொள்ளப்பட்டதாகவும் உள்விவகாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். உள்விவகாரப் பிரச்சினைகளுக்கு புறச்சக்திகளின் தலையீடு அவசியமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment