Pages

Wednesday, April 23, 2014

ஆரையம்பதி வைத்தியசாலை தளவைத்தியசாலை ஆக்கப்படவேண்டும் - ஜனாதிபதியிடம் மனு கையளிப்பு!


Wednesday, April 23, 2014
இலங்கை::மிகப் பழமைவாய்ந்த ஆரையம்பதி வைத்தியசாலையினை தள வைத்தியசாலையாக மாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உறுதி அளித்துள்ளதாக பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் தொன்மையான ஆரையம்பதி வைத்தியசாலை மட்டக்களப்பு கல்லடிப் பாலம் தொடக்கம் மட்டக்களப்பு செட்டிபாளையம் வரைக்கும், மற்றும் பட்டிப்பளை பிரதேசம் உள்ளிட்ட சுமார் 4 பிரதேச செயலகப்பிரிவுகளிலும் உள்ள மக்களின் வைத்திய தேவையினை பூர்த்தி செய்து வருகின்றது யுத்தம், சுனாமி அனர்த்த காலங்களில் குறைந்த அளவான வளத்தின கொண்டு சேவை புரிந்து வந்த இவ் வைத்தியசாலை இன்றும் வீதி விபத்துக்கள் உள்ளிட்ட  அனைத்து அவசர வைத்திய சேவைகளையும் இவ் வைத்தியசாலை மேற்கொண்டுவருகின்ற போதும் இன்றுவரை அரசியல் சூழ்நிலை காரணமாக தளவைத்திய சாலை அந்தஸ்த்து வழங்கப்படாது உள்ளது.

தள வைத்தியசாலை எனும் நாமம் இல்லாது தரம் உயர்த்ப்படாத போதும் தளவைத்தியசாலைக்கு ஈடான வைத்திய சேவையினை வழங்கிவரும் இவ் வைத்தியசாலையினை தள வைத்தியசாலையாக தரம் உயர்த்த வேண்டும் என பல முறை கோரப்பட்டு வந்ததது.

மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தன் அவர்களினால் கிழக்கு மகாண அமைச்சரவை அனுமதிக்காக முன் வைக்கப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களிடம் ஆரையம்பதி வைத்திய அதிகாரி  திருமதி மோகனாவதி மற்றும் ஆரையம்பதி வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவின் தீர்மானங்கள் அடங்கிய கோரிக்கை மனுவினை முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு தலைவருமான பூ.பிரசாந்தன் கையளித்து சுட்டிக்காட்டியபோதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment