Pages

Thursday, April 3, 2014

யாழ். விஜயம் செய்துள்ள நேபாளக் குழுவினர் மேலதிக அரச அதிபர் ரூபினி வரதலிங்கத்தைச் சந்தித்தனர்!

Thursday, April 03, 2014
இலங்கை::
யுத்தத்தின் பின்னரான யாழ்ப்பாணத்தின் நிலைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக நேபாளத்தினைச் சேர்ந்த குழு ஒன்று இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தது.
 
யாழ். அரச செயலகத்தில் மேலதிக அரச அதிபர் ரூபினி வரதலிங்கத்தினைச் சந்தித்த குறித்த குழுவினர், மீள்கட்டுமானம் மற்றும் அமைதி நிலைகள் தொடர்பிலும் கல்வி, மீள்குடியேற்றம், மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள மக்களின் நிலைகள் தொடர்பிலும், பெண்கள் எதிர்நோக்குகின்ற சவால்கள் தொடர்பிலும் விரிவாக கேட்டறிந்ததாக ரூபினி வரதலிங்கம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment