Pages

Saturday, April 12, 2014

ஈ.பி.டி.பி. வெளியேற்றிய விஜயகாந்த் புதிய கட்சி தொடங்கினார்!.

Saturday, April 12, 2014
இலங்கை::
பல்வேறு மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பின்னர் ஈ.பி.டி.பி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் மாநகர சபை உறுப்பினர் விஜயகாந்த் முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளார். யாழ்ப்பாணம் குருநகர் பகுதியிலுள்ள சுவர்க்கா விருந்தினர் விடுதியில் இன்று நண்பகல் நடைபெற்ற நிகழ்வில் புதிய கட்சியை அங்குரார்ப்பணம் செய்து வைத்து அவர் உரையாற்றினார்.
 
அவர் தனது உரையில் - "இங்குள்ள கட்சிகள் ஒன்றும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் பற்றியோ தேசியம் பற்றியோ சிந்திப்பதில்லை. தேர்தல் காலங்களில் மட்டும் வாக்குகளைப் பெறும் நோக்கிலேயே அரசியல்வாதிகள் மக்களைத் தேடி வருகின்றனர். "இந்த நிலையில், மக்களின் கல்வி, கலாசாரம், பண்பாட்டை கட்டி எழுப்பும் நோக்கிலேயே தனது கட்சி அங்குராட்பணம் செய்யப்படுகிறது" - எனத் தெரிவித்தார். விஜயகாந்த் குற்றச்செயல் ஒன்றில் தொடர்புபட்டார் எனத் தெரிவித்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ள நிலையில் பிணையில் வெளிவந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment