Saturday, April 12, 2014
இலங்கை::யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை::யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு விரைவில் மன நல ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் வழங்க உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.மனநல ஆலோசனைகளை வழங்குவது மிகவும் அவசியமானது என ஜனதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
யுத்த வலய மக்கள் எதிர்நோக்கக் கூடிய உளவியல் பிரச்சினைகள் மற்றும் ஏனைய அழுத்தங்கள் தொடர்பில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சமூக சேவைகள், மகளிர் விவகாரம், சுகாதாரம் போன்ற பல்வேறு அமைச்சுக்களினால் இந்த ஆலோசனை சேவைகள் நடத்தப்படுகின்றன. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு எவ்வாறான ஓர் பொறிமுறைமையின் கீழ் மன நல ஆலோசனைகளை வழங்குவது என்பது குறித்து அண்மையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment