Saturday, April 5, 2014

கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று (05) காலை ஒன்பது மணிக்கு தமிழ் சிங்கள புத்தாண்டு விழா!

Saturday, April 05, 2014
இலங்கை::கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று  காலை ஒன்பது மணிக்கு தமிழ் சிங்கள புத்தாண்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடந்தது.

இன்று காலை ஆரம்பமான நிகழ்வில் பாரம்பரிய தமிழ் சிங்கள கலாசார முறைப்படி விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியது பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளான தலையணை சண்டை, கீறீஸ் மரம் எறுதல் மற்றும் துவிச்சக்கர வண்டி ஓட்டம், மரதன் ஓட்டம் உள்ளிட்ட பல விளையாட்;டு நிகழ்வுகள் தொடர்ந்தும் இடம்பெறுகிறது. மாலையில் கலை நிகழ்வுகளும் இசை நிகழ்வுகளும் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய இந்த நிகழ்வில் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி, ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், கிளிநொச்சி படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் சுகந்த ரணசிங்க கரைச்சி பிரதேச செயலாளர் கோ.நாகேஸ்வரன் மற்றும் அதிகாரிகள்  பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment