Pages

Monday, March 31, 2014

அரசாங்கத்தை தோற்கடிக்கும் எதிர்க்கட்சிகளின் முயற்சி வெற்றியளி;க்கவில்லை: பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி!

Monday, March 31, 2014
இலங்கை::
அரசாங்கத்தை தோற்கடிக்கும் எதிர்க்கட்சிகளின் முயற்சி வெற்றியளி;க்கவில்லை என பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் அரசாங்கத்தை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் தீவிர முனைப்பு காட்டியதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு மக்கள் தொடர்ந்தும் பேராதரவு வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொடர்ந்தும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளுக்கு இடையில் பிளவு ஏற்பட்டுள்ளமை புலனாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனநாயக் கட்சியினால் ஈட்பட்டுள்ள வெற்றி தற்காலிகமானது என சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

 

No comments:

Post a Comment