Thursday, February 20, 2014

அங்கஜன் இராமநாதன் தலைமையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஐ.நா பிரதிநிகளுடன் சந்திப்பு!

 
Thursday, February 20, 2014 
இலங்கை::வட மாகாண சபை உறுப்பினர் கெளரவ அங்கஜன் இராமநாதன் தலைமையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று ஐ.நா பிரதிநிகளைச் சந்தித்தனர். வட மாகாண சபைத் தவிசாளர் முன்னிலையில் இடம்பெற்ற இச் சந்திப்பில் ஐ.நா.வின் அரசியல் பிரிவைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
 
வட மாகாண சபையின் செயற்பாடுகள் பற்றியும், அதில் எதிர்க்கட்சியின் நிலைப்பாடு பற்றியும் கெளரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் ஐ.நா. பிரதிநிதிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார். விபரங்களை உள்வாங்கிக் கொண்ட ஐ.நா. பிரதிநிதிகள், வட மாகண சபையின் செயற்பாடுகள் பற்றி அறிய தொடர்ந்தும் ஆவலுடன் இருப்பதோடு, அதன் நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவித்திருந்தனர்.

No comments:

Post a Comment