Pages

Thursday, February 20, 2014

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்செயலாளர் பான் கீ மூனுக்கு அரசாங்கம் அழைப்பு!

Thursday, February 20, 2014
இலங்கை::இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்செயலாளர் பான் கீ மூனுக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

எதிர்வரும் மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பான் கீ மூனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழப்பெரும அண்மையில் பான் கீ மூனை சந்தித்த போது இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மே மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச இளைஞர் பேரவை அமர்வுகளில் பங்கேற்குமாறு அமைச்சர் அழப்பெரும, பான் கீ மூனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அமர்வுகளில் பான் கீ மூன் பங்கேற்பாரா அல்லது தனது பிரதிநிதி ஒருவரை இலங்கைக்கு அனுப்பி வைப்பாரா என்பது இன்னமும் தெளிவாக அறிவிக்கப்படவில்லை.


No comments:

Post a Comment