Pages

Saturday, February 8, 2014

கொழும்பில் இருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்தவரிடம் மதுரை விமான நிலையத்தில் தங்கக் கட்டிகள் பறிமுதல்!

Saturday, February 08, 2014
மதுரை::கொழும்பில் இருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்தவரிடம் மதுரை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
 
கொழும்பிலிருந்து மதுரைக்கு தனியார் விமானம் வந்தது.அதில் வந்த பயனிகளை சுங்கதுறை அதி
காரிகள் சோதனையிட்டனர். சோதனையில் புதுக்கோட்டை மாவட்டம் ராயவரத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் சின்னைய்யா (40) எம்பவர் கொண்டு வந்த சூட்கேசின் அடிபாகத்தில் தலா 100 கிராம் எடைய்யுள்ள 2தங்க கட்டிகளை மறைத்து கொண்டு வந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.
 
அவற்றின் மதிப்பு ரூ.6 லட்சமாகும். சின்னைய்யாவிடமிருந்து தங்கக்  கட்டிகளை பறிமுதல் செய்து விசாரித்து விருகின்றனர்.
 
 

No comments:

Post a Comment