Pages

Thursday, January 2, 2014

சகல வளமும் கொண்ட மக்களாக வாழ்வதற்கான வழியை இந்த புத்தாண்டு ஏற்படுத்தும்: விநாயகமூர்த்தி முரளிதரன்!

Thursday, January 02, 2014
இலங்கை::மலர்ந்திருக்கும் புத்தாண்டு தமிழ் மக்கள் சகல வளமும் கொண்ட மக்களாக வாழ்வதற்கான வழியை ஏற்படுத்தும் என திடமாக நம்புகிறேன் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

தமிழ் மக்கள் கடந்த காலங்களில் பல சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்துவந்தனர்.வேதனையின் உச்சக்கட்டத்தில் இருந்த மக்கள் இன்று அந்த வேதனையில் இருந்து மீண்டு சிறந்த வாழ்வை நோக்கி பயணித்துகொண்டிருக்கின்றனர்.

இந்த நாட்டினை சூழ்ந்திருந்த போர்ச்சூழல் விலகிய நிலையில் தமிழ் மக்களின் வாழ்வின் நம்பிக்கையென்ற ஒளிக்கீற்று ஏற்பட்டு அது பிரகாசித்துநிற்கும் இந்தவேளையில் அந்த ஒளி வாழ்வில் நிரமாகவேண்டும் என்று இந்தவேளையில் பிரார்த்திக்கின்றேன்.

இன்று நாடு பாரிய அபிவிருத்தியினை கண்டுவரும் இந்தவேளையில் தமிழ் மக்கள் சகல வளங்களையும் கொண்டவர்களாக வாழ்வதற்கான வழியை இந்த புதுவரும் ஏற்படுத்தும் என நம்புகிறேன்.
 
 

No comments:

Post a Comment