Pages

Saturday, January 11, 2014

40 மீனவருக்கு 24ம் தேதி வரை காவல் நீட்டிப்பு!

Saturday, January 11, 2014
இலங்கை::புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 22 பேர் கடந்த டிச.29ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதேபோல் பாம்பன் மீனவர்கள்  18 பேரும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
யாழ்பாணம் சிறையிலுள்ள 40 தமிழக மீனவர்களையும், இலங்கை போலீசார் ஊர்காவல்துறை கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தினர். இவர்களிடம் விசாரித்த நீதிபதி மகேந்திரராஜூ, மீனவர்களின் காவலை  வரும் 24ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment